தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை முதல் தொடர் விடுமுறை!
தமிழகத்தில் ஏப்ரல் 16ம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிகளுக்கு இந்த வாரம் 14 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வரவுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்தது. இதனையடுத்து பள்ளிகள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 1 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெறத் தொடங்கியது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. கடந்த மாதம் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை பாடவாரியாக வெளியானது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் முக்கிய முடிவு?
அதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் அதனை தொடர்ந்து மே 5ம் தேதி முதல் பொதுத்தேர்வும் தொடங்கவுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு 15ம் தேதி புனித வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இடையில் சனிக்கிழமை வேலை நாளாகவும், பிறகு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். இந்த நிலையில் இடையில் உள்ள சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. 16 ஆம் தேதி சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 14 முதல் 17 வரை பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ளது. அதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.