தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நவம்பர் 1 ம் தேதி முதல் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறைத்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களின் நலன் கருதி நவம்பர் 1ஆம் தேதி 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பள்ளிகள் திறக்க தேவையான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேலும் பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நூலக கட்டிடம் திறப்பு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்பதால் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் மன ரீதியாக மாணவர்களை சரி செய்யும் வகையில் நவம்பர் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நவம்பர் மாதம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
கொரோனா அச்சத்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றாலும் ஆன்லைன் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சிகள் வாயிலாகவும் வகுப்புகள் தொடரும். மேலும் பள்ளிகள் தாமதமாக திறப்படுவதால் 55% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது டிசம்பர் மாதத்தில் இருந்து மாதந்தோறும் மாதிரி தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.