கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஒடிசா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் அலட்சியத்தின் காரணமாக நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து கொரோனா 3ம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே நாடு முழுவதும் தடுப்பூசி பணிகள் தீவிரமாக்கப்பட்டது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நவம்பர் மாதம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. புதிதாக 433 பேருக்கு தொற்று பாதித்துள்ள நிலையில் 18 வயதுக்கு குறைவானவர்கள் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 207 பேர் குர்தா பகுதியைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. கடற்கரையோர மாவட்டங்களில் இருந்து வரும் 70 சதவீத பாதிப்பு புவனேஸ்வரத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள 80 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்.27 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களினால் மட்டுமே கொரோனா தாக்கம் அதிகமாக பரவுவதாக கூறப்படுகிறது. காரணம் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதிப்பதில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் சாதாரண காய்ச்சல், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு மற்றும் கொரோனா அறிகுறிகளை நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். எனவே, மக்கள் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வந்து பரிசோதனை செய்து கொண்டு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று ஒடிசா மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் நிரஞ்சன் மிஷ்ரா கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!