தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்ட வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.45,000/-
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி, அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக, நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சரின் & ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக “இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை என நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும், அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவைப் பெறுவதில் தொடங்கி, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களைப் பெற வேண்டும் என்ற உயரிய இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ளன.
TNPSC Coaching Center Join Now
ஆர்வமும், திறமையும் உள்ள இளைஞர்கள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தமிழ்நாடு கல்வி & பெல்லோஷிப் திட்டத்தில் இணைந்து பணியாற்ற அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ExamsDaily Mobile App Download
எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் ஜூன் 15,2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TN பள்ளிக் கல்வி துறை காலிப்பணியிடங்கள்:
- Senior Fellows – 38 காலிப்பணியிடங்கள்
- Fellows – 114 காலிப்பணியிடங்கள்
என மொத்தம் 152 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Fellows கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஓர் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும்.
சம்பளம் விவரங்கள்:
Senior Fellows – ரூ.45,000/-
Fellows – ரூ.32,000/-
விண்ணப்பிக்கும் முறை:
அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட, அரசு எடுத்து வரும் இச்சிறந்த முன்முயற்சியில் இணைந்து செயலாற்ற விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் ஏப்ரல் 22, முதல் ஜூன் 15, 2022 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதற்கான பணிக்காலம் ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை ஆகும். பணிக்காலத்தில் தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பணிக்காலம் முழுவதையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு சார்பில் அனுபவ சான்றிதழும் வழங்கப்படும்.