மத்திய அரசின் PM KISAN உதவித்தொகை பெறும் பயனாளர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாட்டில் வறுமை நிலையில் இருக்கும் விவசாயிகள் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் பல கோடி விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.
PM KISAN
PM KISAN திட்டம் 2019ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் இந்தியாவின் நிதி அறிக்கையின் போது பியூஸ் கோயல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து விசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் பணத்தை நேராக செலுத்துவதற்கான திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து விவசாயிகள் கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்தத் தொகை தலா 2000 ரூபாய் என மூன்று தவணைகளில் விவசாயிகளுக்கு தரப்படுகிறது.
ExamsDaily Mobile App Download
இந்தத் திட்டத்தில் (PM Kisan) இதுவரை ரூ. 1.38 லட்சம் கோடி நிதி உதவி, விவசாய குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்று வரும் இந்த திட்டத்தின் 10-வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் வெளியிட்டார் பிரதமர் மோடி. இதுவரை 10 தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், பிரதமர் கிசான் சம்மன் நிதியின் அடிப்படையில் 11-வது தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் (பிஎம் கிசான்) பயனாளிகள் அனைவரும் 11 வது தவணை எப்போது வரும் என்று காத்திருக்கின்றனர். இத்திட்டத்தில் சுமார் 12 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.11 வது தவணை தொகை ஏப்ரல் முதல் ஜூலை வரை வெளியிடப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது, ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் 11வது தவணைக்கு e-KYC சரிபார்ப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் இல்லையென்றால், தவணைப் பணம் வராமல் போகலாம் என அறிவித்துள்ளனர்.