தமிழக ரேஷன் கடை ஊழியர்களின் முக்கிய கோரிக்கை – கூட்டுறவு சங்கம் இன்று பேச்சு வார்த்தை!

0
தமிழக ரேஷன் கடை ஊழியர்களின் முக்கிய கோரிக்கை - கூட்டுறவு சங்கம் இன்று பேச்சு வார்த்தை!
தமிழக ரேஷன் கடை ஊழியர்களின் முக்கிய கோரிக்கை - கூட்டுறவு சங்கம் இன்று பேச்சு வார்த்தை!
தமிழக ரேஷன் கடை ஊழியர்களின் முக்கிய கோரிக்கை – கூட்டுறவு சங்கம் இன்று பேச்சு வார்த்தை!

தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு, சிறப்பு ஊக்கத்தொகை உள்ளிட்டவைகள் வேண்டி அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக இன்று (பிப்.22) ரேஷன் ஊழியர் சங்கத்திடம் கூட்டுறவு சங்க பதிவாளர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ரேஷன் கடை:

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்று பல நாட்களாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படும் தொகை கணக்கில் முறையாக வரவு வைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி- தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

அதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறையால் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வேலை பளு அதிகரித்து வருகிறது. அதனால் உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்துடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி இன்று (பிப்.22) கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ரேஷன் கடை சங்க ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதில் சங்கத்தினர் சிறிது நேரம் மட்டுமே பேச வேண்டும். மேலும் 2 நபர்கள் மட்டுமே பேச்சு வார்த்தையின் போது பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விடுத்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை களைந்து அனைவரும் தங்களது கருத்துகளை தெரிவிக்க கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!