தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஜன.2 மீண்டும் திறப்பு – அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஜன.2 மீண்டும் திறப்பு - அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஜன.2 மீண்டும் திறப்பு - அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஜன.2 மீண்டும் திறப்பு – அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் திறப்பு தேதி குறித்த உத்தரவு வெளியாகியுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

2022 – 2023ம் கல்வி ஆண்டில் தான் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், பாடங்களை தவிர மாணவர்களுக்கு அடிப்படை அறிவை வளர்க்க அரசு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வந்தது. முன்னதாக செப்டம்பர் மாதம் நடந்த காலாண்டு தேர்விற்காக அக்டோபர் மாத தொடக்கத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஜன.03ம் தேதி உள்ளூர் விடுமுறை.. வெளியான அதிரடி அறிவிப்பு.. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு!!

Exams Daily Mobile App Download

அதன்பின்னர், 2ம் பருவத்திற்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு, டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அரையாண்டு , 2ம் பருவ இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 24ம் தேதியான இன்று முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழக பாட திட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.1ம் தேதி வரை விடுமுறை என்றும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!