ஜன.03ம் தேதி உள்ளூர் விடுமுறை.. வெளியான அதிரடி அறிவிப்பு.. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு!!
தமிழகத்தில் இந்த மாவட்டத்திலுள்ள தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவின் சந்தனக்கூடு நிகழ்ச்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் பொதுவாக மாவட்டத்தில் முக்கியமாக நடைபெறும் விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில் இருக்கும் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு பிரமாண்டமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டில் இன்று கொடியேற்றத்துடன் கந்தூரி விழா தொடங்குகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த விழாவானது 14 நாட்கள் வரை நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக சந்தனக்கூடு விழாவை காண வெளி மாவட்டத்திலிருந்தும் நிறைய இஸ்லாமியர்கள் வருகை புரிவார்கள். அந்த வகையில் இந்த வருடம் சந்தனக்கூடு விழா வருகிற 3ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின்போது, நாகூர் தர்காவில் 5 மினராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
டிச. 26 தமிழகத்தில் இந்த இடங்களில் பவர்கட்? – முக்கிய விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
இந்த விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், வருகிற ஜனவரி 3ம் தேதி அன்று சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக மாற்று வேலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.