தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு தனது விளக்கத்தை அளித்துள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியது.
Follow our Instagram for more Latest Updates
அதே போல வரவிருக்கும் 2023 பொங்கல் பண்டிகைக்கு அரசு என்ன பரிசை வழங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களை தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் மாற்றம்? நிதி துறை விளக்கம்!
Exams Daily Mobile App Download
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் இடம் பெறும் பொருட்களை தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து பதில் அளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது அரசின் கொள்கை ரீதியான முடிவு என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கம் அளித்துள்ளது. இவ்வாறான கொள்கை ரீதியான முடிவுகளை முன்கூட்டியே தெரிவிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது.