இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் மாற்றம்? நிதி துறை விளக்கம்!
இந்தியா முழுவதும் தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தெய்வங்களின் படங்களை சேர்க்க பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்தது. இது குறித்து ஆய்வு செய்து மத்திய அரசு தனது இறுதி முடிவை இன்று அறிவித்துள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுகள்
இந்தியா விடுதலை பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் தேசத்தந்தை மகாத்மா காந்தி. இவரின் 100-வது நாள் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 1969 ஆம் ஆண்டு இந்திய ரூபாய் நோட்டில் முதன் முறையாக காந்தியின் படம் பதிக்கப்பட்டு அச்சிடப்பட்டது. முதலில் 100 ரூபாய் நோட்டில் காந்தியின் படம் சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளிலும் காந்தியின் முகம் பதித்து அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது வரை மகாத்மா காந்தி இடம் பெற்ற ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மட்டுமே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியை தவிர பிற வீரர்கள், தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தெய்வங்கள் ஆகியவற்றின் படத்தை ரூபாய் நோட்டுகளில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
தமிழக மக்களே கவனம்…இன்று இத்தனை மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்!!
Exams Daily Mobile App Download
மேலும் இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள படங்கள் மாற்றப்பட போவதாகவும் அவ்வவ்போது போலியான தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர் இந்திய ரூபாய் நோட்டுகளில் இருந்து தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் படத்தை நீக்கும் திட்டம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.