TN MRB முக்கிய அறிவிப்பு – 119 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !
தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து இம்மாத தொடக்கத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி (Food Safety Officer) பதவிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 119 காலிப்பணியிடங்கள் கொண்ட இந்த பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது அவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
TN MRB வேலைவாய்ப்பு விவரங்கள்:
விண்ணப்பதாரர்கள் வயதானது 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 32-59 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
அவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. மேற்காணும் பதவிக்கு விண்ணப்பிப்போரில் பொது பிரிவினர் ரூ.700/- மற்றும் SC/ SCA/ ST/ DAP(PH) பிரிவினர் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
முன்னதாக கல்வித்தகுதியில் Food Technology/ Dairy Technology/ Biotechnology/ Oil Technology/ Agricultural Science/ veterinary Sciences/ Bio- Chemistry/ Microbiology பாடங்களில் Bachelor’s degree தேர்ச்சி அல்லது Master’s Degree in Chemistry அல்லது Bachelor’s Degree in medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதில் சிறிய விதியை அறிவித்து உள்ளது. அதாவது மேற்காணும் தேர்ச்சி பெறுவதற்கு முன் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழ் மொழியில் பயின்றிருக்க வேண்டும் அல்லது தமிழை ஒரு மொழியாக எடுத்து பயின்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் கொண்டவர்களுக்கு 28.10.2021 அன்று வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது 05.11.2021 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.