TN MRB உணவு பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து தற்போது உணவு பாதுகாப்பு அதிகாரி (Food Safety Officer) பதவிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNMRB |
பணியின் பெயர் | Food Safety Officer |
பணியிடங்கள் | 119 |
விண்ணப்ப தேதி | 28.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தமிழக மருத்துவ ஆட்சேர்ப்பு வேலைவாய்ப்பு 2021 :
தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் Food Safety Officer பதவிக்கு 119 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Food Safety Officer வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 32-59 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். பிரிவிற்கு ஏற்ப வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
TNMRB கல்வித்தகுதி :
- Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agricultural Science or veterinary Sciences or Bio- Chemistry or Microbiology பாடங்களில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
- Master’s Degree in Chemistry அல்லது Bachelor’s degree in medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNMRB ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.
Food Safety Officer தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-
- SC/ SCA/ ST/ DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் கொண்டவர்கள் 13.10.2021 முதல் வரும் 28.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.