தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு சிறிது காலம் தள்ளிவைப்பு? எம்எல்ஏ.,விடம் கோரிக்கை!
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் மற்றும் நிர்வாகிகள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொடக்க மற்றும் நடுநிலை கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு – நவ.1 முதல் ‘இந்த’ போன்களில் சேவை நிறுத்தம்!
அதன் பேரில் அனைத்து மாவட்டங்களில் பள்ளி வளாகம், வகுப்பறை போன்றவைகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக மாணவர்கள் வீட்டில் இருந்து விட்டு வெகு நாட்களுக்கு மீண்டும் பள்ளிக்கு வருவதால் அவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் மன சோர்வை போக்கும் வகையில் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உங்களது ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுகிறதா? அதனை தடுக்கும் எளிய வழிமுறைகள்!
தமிழகம் முழுவதும் மீண்டும் 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க தேவையான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு ஈரோடு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தற்போது சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியாவில் மூன்று மாநிலங்களில் கொரோனா அதிகமாக பரவுகிறது. எனவே, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.