தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அரசுக்கு தேர்தல் காரணமாக சில முக்கிய அறிவுறுத்தல்களை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
பணியிட மாற்றம்:
நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் , மே மாதங்களுக்கு நடுவில் மாநில வாரியாக தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முன்னிட்டு தேவையான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசுக்கு தேர்தல் தொடர்பான முக்கிய அறிவுறுத்தல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் இம்மாத இறுதிக்குள் தமிழக அரசின் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
பயிற்சி மையங்களுக்கு கடும் கட்டுப்பாடு – புதிய விதிமுறைகள் வெளியீடு!