தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை – மெரினாவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்!!

0
தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை - மெரினாவில் சிறப்பு பாதுகாப்பு
தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை - மெரினாவில் சிறப்பு பாதுகாப்பு
தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை – மெரினாவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்!!

தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழகத்தில் தற்போது பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஜனவரி 17 ஆம் தேதியன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, காணும் பொங்கல் பண்டிகை அன்று மெரினா கடற்கரையில் பொது மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 18 ஆம் தேதி விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதற்காக, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதே போல சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியிலும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, குற்ற நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக மெரினா கடற்கரையில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 2 டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!