தமிழகத்தில் ஜனவரி 18 ஆம் தேதி விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை தற்போது ஜனவரி 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நீட்டிப்பு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று ஜனவரி 15 ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கியுள்ளது. இதை தொடர்ந்து ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு நேற்று முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
FCI இந்திய உணவுக் கழகத்தில் வேலை – டிகிரி படித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பிய மக்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக, விடுமுறையை ஒரு நாள் மட்டும் கூட்டி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு, பொங்கல் பண்டிகை விடுமுறையை 4 நாட்களுக்கு அதாவது ஜனவரி 18 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.