பழனி முருகன் கோவிலில் தங்க ரத புறப்பாடு – ஏராளமான பக்தர்கள் வருகை!!

0
பழனி முருகன் கோவிலில் தங்க ரத புறப்பாடு - ஏராளமான
பழனி முருகன் கோவிலில் தங்க ரத புறப்பாடு - ஏராளமான
பழனி முருகன் கோவிலில் தங்க ரத புறப்பாடு – ஏராளமான பக்தர்கள் வருகை!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழனி முருகன் கோவில் தங்க ரத புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

பக்தர்கள் வருகை

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது முருகப்பெருமானின் தங்க ரத புறப்பாடு தான். இந்த நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு.

தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை – மெரினாவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்!!

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பழனி முருகன் கோவில் தங்க ரத புறப்பாடு இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!