தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – ‘ஒமிக்ரான்’ வகை கொரோனா அச்சம் எதிரொலி!
கொரோனா வைரஸ் தொடர்ந்து பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பரவி வருவது கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் தமிழகத்தில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.
ஒமிக்ரான் வைரஸ்:
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவியது. பின்னர் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்றும் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நவ.30க்கு பின் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
அந்த வகையில் தென் ஆப்பிரிக்க நாட்டில் இந்த உருமாறிய கொரோனா என அறியப்படும் ஒமிக்ரான் வகை திரிபு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்த திரிபு வகை மிகவும் கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதனால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வகை ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – டிச.3 நேர்காணல்!
அந்த வகையில் ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போஸ்ட்வானா, நியூசிலாந்து, சீனா, ஜிம்பாப்வே, ஹாங்காங், மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு RT PCR நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும், இங்கு வந்த பிறகு மீண்டும் RT PCR சோதனை செய்யப்படும். அதில் நெகட்டிவ் என்று வந்தால் 7 நாள் தனிமைபடுத்தி விட்டு டிஸ்சார்ஜ் செய்யப்படும். அப்படி இல்லையெனில் நெகட்டிவ் வரும் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.