‘பாரதி கண்ணம்மா’ நடிகர் அருணின் புதிய கெட்அப் – சீரியல் முடிவுக்கு வருகிறதா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அருண் பிரசாத் தற்போது ஷிம்லாவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் நிலையில், கெட் அப்பை மாற்றி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவுக்கு வருகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் அருண்
தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக சேர்ந்து வாழ இருக்கின்றனர். அதற்கு ஏற்றார் போல சௌந்தர்யா, லட்சுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து செல்ல பாரதி, கண்ணம்மா வீட்டுக்கு வருகிறார். ஆனாலும் வழக்கம் போல வீர வசனம் பேசிக்கொண்டிருக்கும் பாரதியை கண்ணம்மா எப்படி சமாளிக்கப்போகிறார் என்பது அடுத்தகட்ட கதைக்களமாக வெளியாக இருக்கிறது.
காதலை சொல்லும் எழில், அதிர்ச்சியில் உறைந்து போன அம்ரிதா – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!
இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் நடிகை அருண் பிரஷாத் ஷிம்லாவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு விடுமுறையை உற்சாகமாக கழித்து வரும் நடிகர் அருண் பிரஷாத், அங்கு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இப்போது அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நடிகர் அருண் தனது கெட் அப்பை மாற்றியுள்ளது போல தோற்றமளிக்கிறது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – டிச.3 நேர்காணல்!
இதனுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதியை மறந்து விட்டு அருணாக இருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பாரதியின் கெட்அப் மாறியுள்ளதால், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவுக்கு வருகிறதா எனவும், ஒருவேளை நடிகர் அருண் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகுகிறாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே இந்த சீரியலில் இருந்து நடிகர் ரோஷினி, பரினா ஆகியோர் விலகி இருக்கும் நிலையில் தற்போது நடிகர் அருணும் இந்த சீரியலை விட்டு விலகுகிறாரா என ரசிகர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் எழுந்து வருகிறது.