10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – டிச.3 நேர்காணல்!
தமிழகத்தில் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நேரடி அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி நேர்காணல் நடைபெறும்.
அஞ்சல் துறை வேலை:
தமிழகத்தில் அஞ்சல் துறையின் கீழ் மக்களுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து தபால் நிலையங்களிலும் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஆயுள் காப்பீட்டு முகவர் மாற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டு முகவர் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.
தமிழக அரசில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – 48 காலிப்பணியிடங்கள்!!
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். சுயதொழில் செய்பவர், வேலையில்லா இளைஞர்கள், முன்னாள் காப்பீட்டு முகவர், ஆலோசகர் மற்றும் அங்கன்வாடி, மகிளா மண்டல பணியாளர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு சென்னை அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் மு.ஸ்ரீராமன் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
அதன்படி வரும் டிச.3ம் தேதி எண்.2 சிவஞானம் சாலை, தியாகராயநகர், சென்னை 600 017 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. நேர்காணலுக்கு செல்லும் போது 3 புகைப்படம், அசல் மற்றும் நகல் வயதுச்சான்று, முகவரி மற்றும் கல்விச்சான்றுடன் அணுக வேண்டும். நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படும் நபர் ரூ.5000 க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப்பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.