தமிழகத்தில் இன்று (நவ. 29) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

0
தமிழகத்தில் இன்று (நவ. 29) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - கனமழை எதிரொலி!
தமிழகத்தில் இன்று (நவ. 29) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - கனமழை எதிரொலி!
தமிழகத்தில் இன்று (நவ. 29) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

தமிழகத்தில் நேற்று (நவ. 28) முதல் பல மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் இன்று (நவ. 29) விருதுநகர், தேனி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டுகளை போல இல்லாமல் இந்த ஆண்டு பருவமழை தாக்கம் அதிகமாக இருந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக நேற்று (நவ. 28) முதல் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

ஸ்கூலில் இருந்து இனியாவை அழைத்து வந்த கோபி.. இனியாவை பார்க்க ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா – இன்றைய எபிசோட்!

அந்த வகையில் நேற்று நள்ளிரவு முதல் விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (29.11.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( நவ. 29) விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் காலை 10 மணி வரை நீலகிரி, ஈரோடு, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!