தமிழகத்தில் நவ.30க்கு பின் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!

0
தமிழகத்தில் நவ.30க்கு பின் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் நவ.30க்கு பின் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் நவ.30க்கு பின் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தற்போது கொரோனா தொற்று சற்று கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 30ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் 2வது அலை வேகமெடுக்க தொடங்கிய நிலையில் புதிதாக தலைமையேற்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனை பொதுமக்கள் சரிவர கடைபிடிக்காத நிலையில் எவ்வித தளர்வுகளும் இன்றி 2 வார காலத்திற்கு தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டது. எனவே கொரோனா நோய்த்தொற்று பரவலும் குறையத் தொடங்கியது. மறுபுறம் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.5000 ரொக்கம் – அரசுக்கு கோரிக்கை!

இதனால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட அனைத்தும் திறக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை உலக நாடுகளில் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருகின்றன.

தமிழகத்தின் 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

இந்தியாவிலும் கொரோனா மாறுபடுக்கான அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா 3வது அலை பரவ வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!