தமிழகத்தில் ரூ.100 கோடி மதிப்பில் ‘நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்’ உருவாக்கம் – முதல்வர் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதற்காக சுமார் 100 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு திட்டம்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளிவந்து கொண்டிருக்கும் அறிவிப்புகளின் அடுத்த கட்டமாக நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்காக ‘நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம்’ செயல்படுத்தப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில், நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் சுமார் 38% பேர் ஏழைகளாக இருப்பதாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதற்காக தினக்கூலி அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்கியதாகவும் முதல்வர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!
அந்த வகையில் வேலைவாய்ப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி, தமிழகத்தில் வசித்து வரும் நகர்ப்புற ஏழை மக்களுக்காக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு, திறனற்றவர்கள், பாதி திறனுடையவர்கள், முழு திறன் உடையவர்கள் என்று மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இயற்கை வளங்களை பாதுகாத்தல், வெள்ள மீட்பு பணி, பசுமையாக்கல், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளின் கீழ் தினக்கூலி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 31,382 பேருக்கு தொற்று!
இந்த திட்டமானது சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்கள், 14 மாநகராட்சிகளிலும் ஒரு மண்டலம் என 7 நகராட்சிகள் மற்றும் 37 பேரூராட்சிகளிலும் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. அந்த வகையில் அனைத்து நகர்ப்புற வீடுகளில் வசித்து வரும் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு அரசின் திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அட்டை வழங்கப்படும். இந்த வேலைக்கான வயதுவரம்பு 18 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பணி செய்யும் நபர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் வார இறுதியில் ஊதியம் வழங்கப்படும்.
Amazon நிறுவனத்தில் சுமார் 1,10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய தகவல்!
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு சுமார் ரூ.100 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பான வழிமுறைகள் அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி தற்போது கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது.