இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 31,382 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. இது மூன்றாம் அலையின் அறிகுறி என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரங்களை இப்பதிவில் காண்போம்.
இன்றைய பாதிப்புகள்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தற்போது வரை ஓய்ந்த பாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.35 கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களை ஒப்பிடும் போது தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. மாநில அரசுகள் முழு தளர்வுகளையும் அளிக்கவில்லை. இதற்கு காரணம் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!
நேற்று ஒரு நாள் மட்டும் இந்தியாவில் 318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டில் கொரோனாவால் 4,46,368 பேர் பலியாகியுள்ளனர். மேலும் அதிர்ச்சியூட்டும் செய்தியாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இவர்களை உயிரிழப்பதை 97% தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை – கோவில் நிர்வாகம்!
இந்தியாவில் இதுவரை 84,15,18,026 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 32,542 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,28,48,273 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 3,00,162 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.