தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப வலியுறுத்தல்!
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசிரியர் நியமனம்:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு 3,000 இடைக்கால ஆசிரியர்களை நியமித்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால ஆசிரியர்களின் பணி காலத்தையும் அரசு நீட்டித்துள்ளது.
வாட்ஸ்அப் கணக்கை iPad டுடன் இணைக்க முடிவு – புதிய அப்டேட் வெளியீடு!
இத்தகைய நேரத்தில் அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போதைக்கு மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இடைக்கால ஆசிரியர்கள் நியமன நடவடிக்கையை ஏற்று கொள்ளலாம். ஆனால் இடைக்கால ஆசிரியர்களை கொண்டே பள்ளிகளை நடத்துவது கல்வியின் வளர்ச்சியை பாதிக்கும். அதனால் விரைந்து நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் வலியுறுத்தியுள்ளார்.