தமிழகத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு!

0
தமிழகத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் ஊரகத் திறனாய்வு தேர்வு நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்த மாணவர்களுக்கு தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு:

தமிழகத்தில் மாநில அரசு சார்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பட்டியலினத்தவர்கள், ஆதிதிராவிடர் இனத்தைச் சார்த்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஊரகப்பகுதி மாணவர்களுக்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு அரசு சார்பாக நடத்தப்படுகிறது. கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு பாயில கூடிய மாணவர்கள் பங்கேற்கலாம்.

தமிழகத்தில் பிப்.1 முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு – ஆசிரியர் நல கூட்டமைப்பு கோரிக்கை!

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 50 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். கடந்த வருடம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெற்றது. மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏடிஎம் கார்டு வேலை செய்யாது!

மற்ற ஆண்டுகளை தொடர்ந்து 2021 – 2022 ம் கல்வியாண்டிலும் ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதன் படி பிப்ரவரி 20ம் தேதி தமிழகம் முழுவதும் ஊரகத் திறனாய்வு தேர்வு நடைபெறவிருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருப்பதால் ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு 27ம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!