Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏடிஎம் கார்டு வேலை செய்யாது!

0
Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஏடிஎம் கார்டு வேலை செய்யாது!
Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஏடிஎம் கார்டு வேலை செய்யாது!
Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏடிஎம் கார்டு வேலை செய்யாது!

கோடாக் மகிந்திரா வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு டெபாசிட்களுக்கு புதிய வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த வங்கியில் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏடிஎம் கார்டு

இந்தியாவில் பல்வேறு தனியார் வங்கி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்கி வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய விதிமுறைகளை பல்வேறு வங்கிகள் அமல்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக கோடாக் மகிந்திரா வங்கியில் 7 நாள் முதல் 30 நாள் வரை முதிர்வு கொண்ட டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி 2.5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இங்கு டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்.1 முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு – ஆசிரியர் நல கூட்டமைப்பு கோரிக்கை!

இந்த அறிவிப்பில், டெபிட் கார்டு மூலமாக வழங்கப்படும் அனைத்து சேவைகளும் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் டெபிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்யவோ அல்லது பணம் எடுக்கவோ அத்துடன் மற்ற பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்றும் அறிவித்துள்ளது. மேலும் PIN நம்பர் உருவாக்குவது, PIN நம்பரை மாற்றுவது டெபிட் கார்டை பிளாக் செய்வது, அன்பிளாக் செய்வது உள்ளிட்ட சேவைகளும் இந்த நேரத்தில் பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

10 & 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பிப்.1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மேலும் வருகிற ஜனவரி 31ம் தேதி அன்று அதிகாலை 1 மணி முதல் காலை 4 மணி வரை டெபிட் கார்டுகளில் வழங்கப்படும் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று கோடாக் மகிந்திரா வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு மூலமாக வழங்கப்படும் சேவைகளை பெற இந்த குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு முன்பாகவோ அல்லது அந்நேரத்திற்கு பிறகு பெற்று கொள்ளலாம். இந்த டெபிட் கார்டு பிரச்சனை நள்ளிரவில் தான் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் குறைந்த பாதிப்பு மட்டுமே ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!