தமிழகத்தில் பிப்.1 முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு – ஆசிரியர் நல கூட்டமைப்பு கோரிக்கை!
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க உள்ளது. மேலும் மாணவர்கள் நலன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் நல கூட்டமைப்பு சங்கம் சார்பில் ஒரு முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் தொடக்கம் காரணமாக பொதுமக்கள் நலன் அடிப்படையில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கொரோனா தினசரி தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் கொரோனா தடுப்பூசி போடும் பணி அணைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிப்புக்கு தனியார் பள்ளி சங்கங்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் எதிர்ப்பு கிளம்பின.
வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம், பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!
இந்த விடுமுறையால் மாணவர்கள் நேரடி கற்றல் முறை பாதிக்கப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கலாம் என அறிவிப்பு வெளியாகியது. இதனை தொடர்ந்து பள்ளி கல்வி துறை சார்பில் ,பள்ளிகள் திறப்பு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறையில் நடைபெற கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 15 வயது முதல் 18 வயது உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
10 & 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பிப்.1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த பள்ளிகள் திறப்பு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் நல கூட்டமைப்பு சார்பில் ஒரு கோரிக்கை வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த வகையில் ஒரு வகுப்பறையில் , கொரோனா தடுப்பு விதிமுறையான சமூக இடைவெளியை கடைபிடிக்க வாய்ப்பு இல்லை மற்றும் வகுப்பு அறைகள் பற்றாக்குறை காரணமாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் நல கூட்டமைப்பு தலைவர் அருணன் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சுழற்சி முறை வகுப்புகள் மூலம் மாணவர்கள் அதிக பாதுகாப்புடன் இருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.