முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிப்போர் கவனத்திற்கு – தமிழக அரசு அறிவுறுத்தல்!
தமிழகத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க விரும்புவோர் தேவையற்ற வந்தந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
முதல்வரின் தனிப்பிரிவு:
தமிழகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு (CM CELL) மூலம் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் நேரடியாக பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள துறை சார்ந்த அலுவலகங்களுக்கு அனுப்பபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும்பாலான மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் தான் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அளிக்கப்பட வேண்டும் என்ற தவறான வதந்தி மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
இன்று ‘பாரத் பந்த்’ எதிரொலி – பள்ளி, கல்லூரிகள் மூடல்! கடைகள் அடைப்பு, பலத்த போலீஸ் பாதுகாப்பு!
இதை நம்பி மக்கள் பணம் கொடுத்து படிவங்களை வாங்குகின்றனர். இதுவரை முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் அரசால் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் போலி தகவல்களால் மக்கள் ஏமாறுகின்றனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் கோரிக்கைகளை எழுதி தேவைப்படின் உரிய ஆவணங்கள் நகல்களை இணைத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இன்று முதல் தொடக்கம்!
மேலும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு தபால் மற்றும் இணையதளம் – www.cmcell.tn.gov.in மேலும் முதலமைச்சர் உதவி மையம் (cmhelpline.tnega.org) மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected] மூலமாகவும் மனுக்களை அனுப்பலாம். கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் மக்கள் நேரில் வந்து கூட்டம் கூடுவதை தவிர்த்து இணையதளம் வாயிலாக அனுப்ப அரசு அறிவுறுத்துகிறது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மனுக்களை அளிக்க யாரையும் நம்பி பணம் கொடுத்து மனுக்களை வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.