தமிழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தில் பிஇ, பிடெக் போன்ற பொறியியல் படிப்புகளின் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (27.09.2021) முதல் தொடங்குகிறது.
பொறியியல் கலந்தாய்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2021 – 2022ம் ஆண்டிற்கான பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கடந்த ஜூலை 26ம் தேதி ஆன்லைன் வாயிலாக தொடங்கியது. ஆகஸ்ட் 24ம் தேதியுடன் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு அவர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னை: கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
அதனை தொடர்ந்து செப்டம்பர் 15 முதல் தமிழகம் முழுவதும் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில் மாணவர்கள் கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது அங்கு பயிலும் மாணவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து அதன் பிறகு முடிவு செய்ய வேண்டும். கடந்த வருடம் அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றதால் இணையதள புள்ளி விவரங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட்-ஆப் மதிப்பெண்கள் – முழு விபரம் இதோ!
இன்று முதல் பொறியியல் படிப்புகளுக்கான பிஇ, பிடெக் படிப்புகளின் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. தரவரிசை பட்டியலில் ஒன்று முதல் 14,788 வரை உள்ளவர்களுக்கு அக்டோபர் 5 வரை கலந்தாய்வு நடைபெறும். ஒவ்வொரு சுற்றுக்கும் கலந்தாய்வு கட்டணம் செலுத்த இரண்டு நாட்களும், கல்லூரியை தேர்ந்தெடுக்க 2 நாட்களும் அளிக்கப்படும். தரவரிசைப் பட்டியலில் 14,789 முதல் 45,227 வரை பெற்றவர்களுக்கு அக்டோபர் 1 முதல் தேதி வரை 2வது சுற்று கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.