சென்னை: கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமையன்று விலை ஏற்றத்துடன் முடிவடைந்த ஆபரணத் தங்கத்தின் விற்பனையானது இன்றும் (செப்டம்பர் 27) அதே நிலையில் நீடித்துள்ளது. அந்த வகையில் இன்றைய விற்பனையில் ஒரு சவரன் தங்கம் ரூ.16 வரை உயர்ந்துள்ளது.
தங்கநகை விற்பனை
சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. வழக்கமான ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமைகளில் தங்க நகைகளின் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை என்பதால், அதற்கு முந்தைய நாளின் விற்பனை நிலவரத்தின் படி ஞாயிற்று கிழமை விற்பனை அமையும். அந்த வகையில் கடந்த வார இறுதியில் சற்று உயர்வுடன் முடிவடைந்த ஆபரணத் தங்கத்தின் விற்பனை நேற்றும் (செப்டம்பர் 26) தொடர்ந்தது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இறுதி முடிவு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
இதற்கிடையில் இன்று (செப்டம்பர் 27) மீண்டும் துவங்கியுள்ள ஆபரணத் தங்கத்தின் விற்பனை நிலவரத்தில் தங்கத்தின் விலை மீண்டுமாக உயர்வடைந்துள்ளது. இந்த உயர்வு சவரனுக்கு ரூ.16 என இருந்தாலும், மொத்தமாக நகைகளை வாங்குபவர்களுக்கு விலை அதிகரிப்பு என்பது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய (செப்டம்பர் 27) விற்பனையில் சவரனுக்கு ரூ.16 வரை உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.34,952க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் ஆபரணத் தங்கமும் ரூ.4,369க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடன் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.70 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.