தமிழகத்தில் அரசுத் துறை செயலாளர்கள் மாவட்டங்களில் நேரில் களஆய்வு – முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ” கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அரசுத்துறை செயலாளர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் உத்தரவு
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நலத்திட்டப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நிர்வாக பணிகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த பிப் 1 ஆம் தேதி “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சென்று அங்கே அரசின் திட்டங்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்.
அந்த வகையில் அரசுத் துறை செயலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன் படி அரசுத்துறை செயலாளர்கள் மாவட்டங்களில் நேரில் களஆய்வு மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் .மாதம்தோறும் குறைந்தபட்சம் 2 மாவட்டங்களில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.