பெங்களுர் – மைசூரு விரைவு சாலை – பேருந்து கட்டணம் எவ்வளவு தெரியுமா? கவலையில் பயணிகள்!
கர்நாடக மாநிலம் பெங்களூரு – மைசூரு இடையே போக்குவரத்தை விரைவுபடுத்தும் வகையில் விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இச்சாலையில் இயங்கும் அரசு பேருந்துகளில் ரூ. 20 வரை கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை:
கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் மைசூரு இடையேயான பயணத்திதின் போது அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பயண நேரம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை கருத்தில் கொண்டு அரசு பெங்களூரு – மைசூரு இடையே விரைவு சாலை அமைக்க அரசு திட்டமிட்டது.
அதன் விளைவாக ரூ. 8.480 கோடி செலவில் தற்போது பெங்களுர் மற்றும் மைசூரு இடையே 10 வழி விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பெங்களூர் – மைசூர் இடையேயான பயண நேரம் 75 நிமிடங்களாக குறைந்துள்ளது. இந்த சாலையை பொது மக்களின் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி கடந்த வாரம் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் அரசுத் துறை செயலாளர்கள் மாவட்டங்களில் நேரில் களஆய்வு – முதல்வர் உத்தரவு!
இந்த நெடுஞ்சாலையில் செல்ல கூடிய வாகனங்களுக்கான சுங்க கட்டணம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் கட்டணத்தொகை அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நெடுஞ்சாலையில் பயணிக்கும் அரசு பேருந்துகளில் ரூ. 15 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.