தமிழகத்தில் நாளை மறுநாள் மாலை 6 மணிமுதல் இதற்கெல்லாம் தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ம் தேதி அன்று நடக்க உள்ள நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு:
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திமுக அரசு முயற்சி எடுத்து வந்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் அதற்கான பதவிகள் காலியாக உள்ளது. இதனால் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஜனவரி 26ம் தேதி அன்று அறிவித்தது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கினார்கள். தேர்தல் ஆணையம் இதற்கான விதிமுறைகளையும் முன்னதாக அறிவித்திருந்தது.
இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பதவிகளில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 12,607 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மனுக்களின் படி 57,778 பேர் இறுதி பட்டியலில் உள்ளனர், ஒரு சில இடங்களில் மட்டும் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் இறந்து விட்டதால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 19ம் தேதி தேர்தல் என்பதால், பிப்ரவரி 17ம் தேதி வரை தேர்தல் பிரச்சாரங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அப்ரூவல் பெற வழிமுறைகள்!
இதனால் அனைத்து கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிரமாக இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில தேர்தல் ஆணையம், நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைவதால், அதன் பிறகு அனைத்து வெளியூர்காரர்களும் வெளியற வேண்டும் என்றும், அப்படி வெளியேறாத நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.