இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் அங்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
கொரோனா வைரஸின் ஓமைக்ரான் மாறுபாடு நாடு முழுவதும் வழக்குகளின் அதிகரித்து வந்ததை அடுத்து உத்தரபிரதேசத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தினசரி வழக்குகள் தொடர்ந்து குறைந்து வருவதால், மாநில அரசு இப்போது இரவு ஊரடங்கு உத்தரவை ஒரு மணி நேரம் தளர்த்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 1,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 15,276 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அப்ரூவல் பெற வழிமுறைகள்!
கடந்த 24 மணி நேரத்தில் 3,101 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக மாநிலத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை, அன்று உத்தரபிரதேச அரசு திருத்தப்பட்ட கோவிட்-19 வழிகாட்டுதல்களை வெளியிட்டது. புதிய வழிகாட்டுதல்களின்படி, மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்து வகுப்புகளுக்கும் நர்சரி முதல் 12 ஆம் வகுப்பு வரை நாளை பிப்ரவரி 16ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும். மேலும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் முழு அளவில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு – காத்திருக்கும் 75 லட்சம் பேர்! வெளியான ஷாக் ரிப்போர்ட்!
இனி, தினமும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று மாநில அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. உணவகங்கள், சினிமா அரங்குகள் மற்றும் ஹோட்டல்களும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் நோய் பாதிப்பு விகிதம் குறைந்துள்ள போதிலும், மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.