தமிழக அரசு வேலைவாய்ப்பு – காத்திருக்கும் 75 லட்சம் பேர்! வெளியான ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் அரசு வேலை வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 75.88 லட்சமாக உள்ளது. இருப்பினும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு 72 லட்சமாக இருந்த பதிவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
அரசு வேலைவாய்ப்பு:
தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்தவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியானவுடன் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது பெயா், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு வேலைவாய்ப்பக அலுவலகங்களில் பதிவு செய்து வருகிறாா்கள்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் எண்ணிக்கை 75 லட்சத்து 88 ஆயிரத்து 359 ஆக உள்ளது. அவா்களில் 35 லட்சத்து 56 ஆயிரத்து 85 போ் ஆண்கள் மற்றும் 40 லட்சத்து 32 ஆயிரத்து 46 போ் பெண்கள், 228 போ் மூன்றாம் பாலினத்தவர் ஆகும். மேலும் வயது வாரியாக வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் எண்ணிக்கையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது
1. 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 81 ஆயிரத்து 695 பேரும் தங்கள் பெயர்களைப்
பதிவு செய்துள்ளனர்
2. இதனை தொடர்ந்து 19 முதல் 23 வயது வரை உள்ள கல்லூரி மாணவா்களில் 16 லட்சத்து 14 ஆயிரத்து 582 பேரும், 24 முதல் 35 வயது வரை உள்ளவர்களில் 28 லட்சத்து 60 ஆயிரத்து 359 பேரும் தங்களது பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு – அரசு அதிரடி அறிவிப்பு!
3.மேலும், 36 முதல் 57 வயது வரை உள்ளவர்களில் 13 லட்சத்து 20 ஆயிரத்து 337 பேரும் பதிவு செய்திருக்கின்றனர்.
4. 58 வயதுக்கு மேற்பட்டவா்களில் 11 ஆயிரத்து 386 போ் பெயா்களைப் பதிவு செய்துள்ளனா். ஒட்டுமொத்த வேலைவாய்ப்பக பதிவுதாரா்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 825 போ் மாற்றுத் திறனாளிப் பதிவுதாரா்கள் ஆவா். அவர்களில் ஆண்கள் 92 ஆயிரத்து 779 பேரும், பெண்கள் 47 ஆயிரத்து 46 பேரும் பதிவு செய்திருக்கின்றனர்.