தமிழக கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதா – அரசு எடுத்த முக்கிய முடிவு!
தமிழக கூட்டுறவு சங்கத்தின் சட்டங்களை திருத்தம் செய்யும் மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று சட்ட மசோதா குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சட்ட மசோதா:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இரு முறை அரசு ஊழியர்கள் வயது மாற்றம் செய்யப்பட்டு தற்போது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு இளைஞர்கள் முதல் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனை தொடர்ந்து தமிழக கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை குறைக்க அரசு முடிவு செய்தது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்த சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஆளுநர் பல்வேறு கேள்விகளை அரசிடம் கேட்டு வந்தார்.
Exams Daily Mobile App Download
அத்துடன் ஒப்புதல் அளிக்காமலும் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் தமிழக அரசு இன்று கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இதனால் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் குறைக்கப்படாது தொடர்ந்து தற்போது போல 5 ஆண்டுகளாகவே நீடிக்கும்.