பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு – தமிழக அரசு எதிர்ப்பு… சமூக நீதி குறித்து அமைச்சர் பேட்டி!
இந்தியாவில் மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இட ஒதுக்கீடு:
இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், ஆதி திராவிடர் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு முறை இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கும் 10% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என்று கூறி தமிழக அரசு இதனை நிராகரித்து வருகிறது. மேலும் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 10% பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு செல்லும் தீர்ப்பளிக்கப்பட்டது.
சென்னைக்கு ஆபத்து.. தாக்க வரும் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை மையம் பகிர் தகவல்!
Exams Daily Mobile App Download
இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் . 10 சதவீத இடஒதுக்கீடுக்கு ஆதரவான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக நீதியைச் சீர்குலைக்க நாங்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.