சென்னைக்கு ஆபத்து.. தாக்க வரும் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை மையம் பகிர் தகவல்!
தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் வேளையில் அடுத்தாக மற்றொரு புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அதிக கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
புயல்:
தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
தொடர் மழையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது தேங்கியுள்ள மழை நீரால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மயிலாடுத்துறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் 44 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – 14ம் தேதி அன்று இதை செய்ய உத்தரவு!
Exams Daily Mobile App Download
இதற்கு மத்தியில் அடுத்த தாக்குதலாக வரும் 16ஆம் தேதி அந்தமான் அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது நவ.19ம் தேதியில் வலுவடைந்து சென்னையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பெய்துள்ள கனமழையால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.