தமிழகத்தில் ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆவின் ஊழியர்களுக்கு ரூ. 3.75 கோடி செலவில் தீபாவளி ஊக்கத்தொகை வழங்கப்பட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊக்கத்தொகை அறிவிப்பு:
தமிழகத்தில் வருகிற அக். 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். இந்த ஆண்டும் தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட இருக்கிறது.
உலக நாடுகளை வீழ்த்தி முன்னிலைக்கு வந்த ஐதராபாத் நகரம் – குவியும் வாழ்த்துக்கள்!
Exams Daily Mobile App Download
தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த தீபாவளிக்கு 10 சதவிகித போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் கருணைத் தொகை 1.67% என மொத்தம் 10% வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க முடிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து ஆவின் நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அரசு முடிவு செய்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் படி கடந்த நிதியாண்டில் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையின் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு ரூ. 13.71 கோடி லாபம் கிடைத்துள்ளது. அதனால் அந்த லாபத்தில் இருந்து 18 ஆயிரத்து 50 பால் உற்பத்தியாளர்களுக்கு, ரூ. 3.75 கோடி செலவில் தீபாவளி ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது. அதனால் ஆவின் நிறுவன ஊழியர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்