உலக நாடுகளை வீழ்த்தி முன்னிலைக்கு வந்த ஐதராபாத் நகரம் – குவியும் வாழ்த்துக்கள்!
உலக பசுமை நகரங்கள் விருதிற்கான பட்டியலில் உலகின் முன்னனி நாடுகளை பின்னுக்கு தள்ளி ஐதராபாத் நகரம் முன்னணியில் உள்ளது.
உலக பசுமை நகரங்கள்:
கொரியா நாட்டின் ஜெஜுவில் வெள்ளிக்கிழமை அன்று உலக பசுமை நகரங்கள் விருதிற்கான விழா நடத்தப்பட்டது. அங்கு, ‘நகர வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கான இயற்கை சார்ந்த அணுகுமுறைகள்’ குறித்த விருதுகள் அளிக்கப்பட்டது. அசோசியேஷன் இன்டர்நேஷனல் டெஸ் புரொடக்சர்ஸ் டி எல்’ஹார்டிகல்ச்சர் (AIPH) என்ற நிறுவனம் ஆண்டுதோறும் இயற்கையை பேணி பாதுகாக்கும் நகரங்களுக்கு சிறந்த விருதை அளிக்கிறது.
அரசு வேலைக்கு இனி இந்த சான்றிதழ் கட்டாயமில்லை – மாநில அரசு புதிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
ஐதராபாத் நகரம், AIPH ன் ‘Living Green for Economic Recovery and Inclusive Growth’ பிரிவில் விருதை வென்றுள்ளது. “மாநிலத்தின் மொத்த புவியியல் பரப்பில் 24% முதல் 33% வரை மரங்களை வளர்க்க ஐதராபாத் திட்டமிட்டுள்ளது. பிரேசிலில் உள்ள பாரிஸ், பொகோடா, மெக்சிகோ சிட்டி, மாண்ட்ரீல் ஆகிய முக்கிய நகரங்களை வீழ்த்தி ஹைதராபாத் உலக பசுமை நகரங்கள் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
உலகின் 18 நகரங்களை பின்னுக்கு தள்ளி ஹைதராபாத், இறுதி பட்டியலில் இடம்பிடித்து ஆறு நகரங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் உலக பசுமை நகரங்கள் விருதைப் பெற்றுள்ளது என்பது, இயற்கையின் அதிக பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும் வகையிலும், மேம்பட்ட பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்