தமிழகத்தில் ஆவின், மின்வாரியம், போக்குவரத்து கழக காலிப்பணியிடங்கள் 2022 – TNPSC மூலம் தேர்வு!
ஆவின், மின்வாரியம் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான பணியிடங்கள் இனி TNPSC தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் அறிவிப்பு:
தமிழக அரசுக்கு சொந்தமான பால் நிறுவனமான ஆவின் என்பது பால் கொள்முதல் பதப்படுத்துதல் குளிரூட்டல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை செய்து வரும் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதற்கான பணியிடங்களுக்கும் மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பணியிடங்களுக்கும் தமிழர்களுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது சட்டப்பேரவையில் இது குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மனு தாக்கல் செய்தார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
மேலும் ஆவின் பணிக்கான ஆட்சேர்க்கையும் அரசுக்கு சொந்தமான சட்டப்பூர்வமான வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், மேலும் மாநில அரசுக்கு கீழ் உள்ள அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கையும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் (TNPSC) ஒப்படைக்கப்பட்டு சட்டப்பேரவையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இவரது கோரிக்கை சட்ட மசோதா பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. மேலும் இதற்கு அரசு தரப்பில் இருந்து ரூ.3,19,65000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதை தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் பணிகளின் ஆட்சேர்க்கையும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஓப்படைக்கப்பட்டு இதற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்காக முன்பணமாக 97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் TNPSC தேர்வு விதிமுறைகள் இப்பணி தேர்வுகளுக்கும் விதிக்கப்பட்டு தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே TNPSC தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் ஆவின் போக்குவரத்து மற்றும் அரசுக்கு கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பணியில் சேர முடியும் என்று தெரியவருகிறது.