தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது..!
இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பின்படி, Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த முழு தகவல்களையும் இப்பதிவில் தொகுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்பு இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram (IIITDM) |
பணியின் பெயர் | Junior Research Fellow |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IIITDM காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று மொத்தம் இரண்டு பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
- Junior Research Fellow (DST-SRG) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் B.E / B.Tech in ECE, EI, EE மற்றும் M.Tech in VLSI, ECE, EI, M.Sc in Electronics பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- Junior Research Fellow பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் B.E / B.Tech in Computer Science / Engineering மற்றும் ME / M.Tech in CSE / IT/ Data Science / AI போன்ற பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
IIITDM வயது:
இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவன அறிவிப்பின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- அளிக்கப்படும்.
IIITDM தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் Online அல்லது Offline Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
IIITDM விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியே அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளான 31.01.2022 தேதிக்கு முன்பு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். 31.01.2022 தினத்திற்கு பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.