“கனா காணும் காலங்கள் 2” சீரியலில் களமிறங்கும் டிக்டாக் பிரபலம் – அவரே வெளியிட்ட எமோஷனல் பதிவு!
விஜய் டிவியில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றான “கனா காணும் காலங்கள் சீசன் 2” விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அதில் டிக்டாக் பிரபலம் தீபிகா நடிக்க இருப்பதை மிகவும் எமோஷனலாக சொல்லி இருக்கிறார்.
கனா காணும் காலங்கள் 2:
தமிழ் சின்னத்திரையில் பல ஆண்டுகள் ஆனாலும் நெஞ்சை விட்டு நீங்காத சீரியல்களை கொடுத்த பெருமை விஜய் டிவியை சேரும். அந்த வகையில் பள்ளி மாணவர்களின் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டிய இந்த சீரியல் இன்னும் பலரது மனதில் நிலைத்து நிற்கிறது. இந்நிலையில் பள்ளி பருவ நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்த விஜய் டிவி “கனா காணும் காலங்கள்” சீரியலில் தற்போது இரண்டாவது சீசன் தொடங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிரசவத்துக்கு பின் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா கலந்து கொண்ட நிகழ்ச்சி – ரசிகர்கள் உற்சாகம்!
அதில் பல புது முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இந்த காலத்திற்கு ஏற்றார் போல புதுமைகள் சேர்க்கப்பட்டு ப்ரோமோ வெளியானது. அதில் ஒரு சிலர் பேர் டிக்டாக் மூலம் பிரபலமானவர்கள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் டிக்டாக் மூலமாக பிரபலமான தீபிகா தற்போது அதில் நடிக்க இருக்கும் நிலையில் அது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் ஸ்கூல் படிக்கும் போது இந்த சீரியல் பார்க்க வேகமாக ஓடி வருவேன்.
விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் – சீசன் 3 புகழ் என்ட்ரி உறுதி!
அந்த அளவிற்கு சீரியல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தற்போது அந்த சீரியலில் நான் நடிக்க இருக்கிறேன் என்றால் என்னால் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை எனவும் பதிவிட்டுள்ளார். இந்த சீரியலில் அவர் அபி என்ற முன்னணி ரோலில் நடிப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இவர் டிக் டாக் செயலியில் பல ரீகிரியேஷன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமான நிலையில் தற்போது அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது, ஆனால் இந்த சீரியல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் சற்று வருத்தத்துடன் இருக்கின்றனர்.