தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தொற்றும் தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த நபருக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. பிறகு அடுத்தடுத்து பலருக்கும் தொற்று பரவி வருகிறது. இதனை தடுப்பு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தப் வகையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமானப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆவின், மின்வாரியம், போக்குவரத்து கழக காலிப்பணியிடங்கள் 2022 – TNPSC மூலம் தேர்வு!
தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளது. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அனைத்து இடங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்ற சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர்கள் நகராட்சி பேரூராட்சி அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
இதில் பேசிய வருவாய் கோட்டாட்சியர் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதனை காவல்துறையினர் அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். மேலும் அரசின் நோய் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.