ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பின்பற்றும் புதுச்சேரி அரசும் பொங்கல் தொகுப்பு வழங்கும் விதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
அந்த வகையில் வரும் ஜன.14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை பின்பற்றும் புதுச்சேரி அரசும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு வழங்கும் விதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு அறிவிப்பானது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அதன்படி இந்த பொங்கல் தொகுப்பில் பொங்கல் வைக்க தேவையான 10 பொருட்கள் அடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் ரூ.490 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர் வரும் ஜன.12ம் தேதி தேசிய இளைஞர் திருவிழாவில் பங்கேற்க பாரத பிரதமர் மோடி அவர்கள் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.