தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கூடுதல் தகவல்களை தெரிவித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். இதனால் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக விவசாயிகளுக்கு உதவிபுரியும் நோக்கத்தோடு கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்காக பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு நகைக்கடன்களை பெற்றவருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.
EMI இல் இருசக்கர வாகனம் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வட்டி விகிதம் & முழு விபரங்கள் இதோ!
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஏராளமானோர் நகைக்கடன் மோசடியில் ஈடுபட்டு வந்தனர். அத்துடன் போலி நகைகளை கொண்டு நகைக்கடன் பெறுவது மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் வெவ்வேறு கூட்டுறவு வங்கி கிளைகளில் நகைக்கடன் பெறுவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டனர். இந்த மோசடியில் வங்கி அதிகாரிகள் உட்பட உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் முறையாக ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸ் – முக்கிய கோரிக்கை!
இதனை தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இது குறித்து கூறியதாவது, தமிழகத்தில் பல இடங்களில் கூட்டுறவு வங்கிகளில் பண மோசடி நடந்துள்ளது. தற்போது ஆரணியில் கவரிங் நகைகளை கொண்டு நகைக்கடன் பெற்றுள்ளனர். அத்துடன் திருவண்ணாமலையில் ஒரே நபருக்கு 672 நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முறைகேடாக பெற்று கொண்ட நகைக்கடன்களுக்கு எவ்வாறு தள்ளுபடி செய்ய முடியும்? என்று செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும் முறைகேடாக பெற்றுக்கொண்ட நகைக்கடன்களையும், 5 சவரனுக்கு மேல் வழங்கப்பட்ட நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்ய இயலாது என்றும் கூறியுள்ளார்.