தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – அகஸ்தியா அறிவியல் பயிற்சி ஒத்திவைப்பு! CEO அறிவிப்பு!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - அகஸ்தியா அறிவியல் பயிற்சி ஒத்திவைப்பு! CEO அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - அகஸ்தியா அறிவியல் பயிற்சி ஒத்திவைப்பு! CEO அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – அகஸ்தியா அறிவியல் பயிற்சி ஒத்திவைப்பு! CEO அறிவிப்பு!

நாடு முழுவதும் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடத்தில் ஆர்வமூட்டும் விதமாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் வழங்க வருகிறது. அந்த வகையில் வரும் நாட்களில் நடைபெற இருந்த பயிற்சி வகுப்புகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அகஸ்தியா அறிவியல் பயிற்சி:

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடத்தில் ஆர்வமூட்டும் விதமாக அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு 12 மாவட்டங்களில் நடைபெற்ற அறிவியல் பயிற்சி வகுப்புகள் இந்த ஆண்டு 18 மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து மாவட்ட வாரியாக இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!

இந்த பயிற்சி வகுப்புகள் முற்றிலும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளுமாறும், பின்னர் அவர்கள் மூலம் இதர ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே இணைய வழியில் முதல் கட்ட பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் ஆந்திராவில் குப்பம் வளாகத்தில் நடைபெற உள்ளதாகவும், அதற்கு ஏற்றார் போல் உரிய ஆசிரியர்களை பணி விடுப்பு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் ஆவின், மின்வாரியம், போக்குவரத்து கழக காலிப்பணியிடங்கள் 2022 – TNPSC மூலம் தேர்வு!

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை அறிவியல் பாடம் நடத்தும் 310 ஆசிரியர்களில் 187 ஆசிரியர்களுக்கு ஜன.10 முதல் ஜன.12ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களுக்காக இந்த பயிற்சி வகுப்புகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!