தமிழகத்தில் 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் இன்று (பிப்.14) ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.
பொதுத்தேர்வு ஆலோசனை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்டது. அதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.
மாநிலம் முழுவதும் இனி இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!
அதனால் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நர்சரி பள்ளிகளும் வருகிற 16 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தற்போது பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வி மற்றும் அரசு தேர்வுத்துறை அதிகாரிகளும் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
PF பெறும் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பென்ஷன் நம்பர் அவசியம்! முழு விபரம் இதோ!
அதில் பொதுத்தேர்வை எத்தனை நாட்கள் நடத்துவது, ஒவ்வொரு பாடத்துக்கும் இடைவெளி விடுவதா, தொடர்ச்சியாக நடத்தி முடிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு உட்பட மற்ற வகுப்புகளுக்கு எப்போது தேர்வு நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட உள்ளது. பின் சுகாதாரத் துறையினருடன் ஆலோசிக்கப்பட்டு, தேர்வு அட்டவணை இறுதி செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.