மாநிலம் முழுவதும் இனி இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா 3ம் அலைத்தொற்றின் பாதிப்புகள் குறைந்து வரும் பட்சத்தில் தற்போது அமலில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஒரு மணி நேரம் மட்டும் தளர்த்துவதாக அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வு
நாடு முழுவதும் கொரோனா 3ம் அலையின் புதிய பாதிப்புகள் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு மற்றும் வார இறுதி முழு முடக்க கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நிலவும் தற்போதைய நோய் தொற்று சூழலை ஆய்வு செய்த அரசு இரவு நேர ஊரடங்கில் சில நேர தளர்வுகளை அறிவித்துள்ளது.
இது குறித்து அம்மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி நேற்று (பிப்.13) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, ‘உத்தரபிரதேச மாநிலத்தில் தினசரி கொரோனா நோய்த்தொற்றுகள் பெரும் சரிவை கண்டு வருவதால் இரவு ஊரடங்கு உத்தரவு ஒரு மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இனி இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பணப்பட்டுவாடாவில் களமிறங்கிய கட்சிகள்!
இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் தற்போது மொத்தம் 15,276 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகளின் அரசியல் பிரச்சாரத்திற்காக சில கட்டுப்பாடுகளை நீக்கி இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருக்கும் நிலையில், இன்று (பிப்.14) நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் கரும்பு விவசாயிகள் வாக்களிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.